புதுக்கோட்டை

அறந்தாங்கி: 4 வீடுகளில் 65 சவரன் நகை திருட்டு

DIN

புதுகை மாவட்டம், அறந்தாங்கி அருகே அழியாநிலை, குன்னக்குரும்பி உள்ளிட்ட ஊர்களில் சனிக்கிழமை வீடுகளின் பூட்டை உடைத்து 65 சவரன் நகைகள் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.
புதுகை மாவட்டம், அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சகாதேவன்(40). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ஆனந்தி கட்டுமாவடி சென்றுள்ளார். இதையறிந்த மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அவரது வீட்டிலிருந்து 50 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கத்தைத் திருடியுள்ளனர். மேலும், இவரது வீட்டை ஒட்டியுள்ள வீட்டில் சகாதேவன் தம்பி மெய்யர், அவரது மனைவி லெட்சுமி பிரபா ஆகியோரும் வீட்டைப் பூட்டி விட்டு, சிலட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரது வீட்டில் இருந்து முக்கால் சவரன் தோடை திருடியுள்ளனர். இதே பகுதியில் உள்ள சின்னையா மகன் சிதம்பரம் வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகைகளைத் திருடிச்சென்றுள்ளனர். பக்கத்து ஊரான அழியாநிலை வாளக்குடியிருப்பில் உள்ள ரங்கசாமி (40) என்பவரது வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய மர்மநபர்கள் வீட்டில் இருந்து 6 பவுன் நகைகளைத் திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து, அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கே.பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஏற்கெனவே அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை இரவு, 7 லட்சம் ரொக்கம் மற்றும் 20 சவரன் நகை திருடு போனது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT