பொன்னமராவதி வாரச்சந்தை பேரூராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதியில் வாரச்சந்தை சனி, செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. இச்சந்தை மழையின்போது சேறும், சகதியாக காணப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து அண்மையில் தினமணியில் செய்தி வெளியாது.
இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தால் புதன் வியாழக்கிழமைகளில் தூய்மைப்பணிகள் நடைபெற்று முடிந்தன. மிகச்சிறந்த முறையில் சந்தைப்பகுதியை சீரமைத்த பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட்டுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.