புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே குடிநீர் கோரி மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே நகரம் ஊராட்சியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம் அருகேயுள்ள நகரம் ஊராட்சி மக்களுக்கு பல நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் இல்லையாம். மேலும், சிலர் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் மின்மோட்டார்களை கொண்டு நீரை திருடுகின்றனராம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை நகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற வருவாய்த் துறையினர், கீரமங்கலம் போலீஸார்  நடத்திய பேச்சுவார்த்தையில் மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT