புதுக்கோட்டை

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகளைக் கொண்டு சோதனை நடத்திய மத்திய அரசைக் கண்டித்தும், வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட விட வலியுறுத்தியும் புதுக்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, புதுக்கோட்டை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்த அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோகர்ணம் போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நகரத் தலைவர் ஏ. இப்ராகிம்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT