புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மரம் விழுந்ததில் மரம் வெட்டும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி மாங்குட்டிபட்டியைச் சேர்ந்தவர் ஆர்.சேகர்(40). மரம் வெட்டும் தொழிலாளி. இவர், நெடுவாசல் அண்ணாநகர் பகுதியில் அய்யாக்கண்ணு என்பவரது தோப்பில் உள்ள மரங்களை சக தொழிலாளிகளுடன் வெட்டும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டார் .
அப்போது, எதிர்பாராதவிதமாக சேகர் மீது மரம் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த சேகர், ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.