காவிரி மேலாண்மை வாரியம் கோரி கடலில் இறங்கி மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோட்டைப்பட்டனம் அருகே மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோட்டைப்பட்டனம் அருகே மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டனம் அருகே வண்ணிச்சிப்பட்டனத்தில் கடலில்
இறங்கி நடைபெற்ற போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டப் பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமை வகித்தார்.
செயலாளர் முபாரக் அலி, மாநில தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் அ.ஹாரிஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, செய்யது அபுதாகீர், அறந்தாங்கி நகர அவைத் தலைவர் அப்துல் ஹமீது, நகரச் செயலாளர் ஜகுபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.