விராலிமலையில் மது விற்ற 2 பேர் கைது
விராலிமலை பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ற 2 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
விராலிமலை பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ற 2 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
விராலிமலை பகுதிகளில் அனுமதியின்றி அரசு மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸார் மாதிரிபட்டி குளக்கரையில் அனுமதியின்றி மதுபானம் விற்ற பெரியார் நகரைச் சேர்ந்த சு. ராஜகோபாலை (60) கைது செய்து, அவரிடம் இருந்த 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல, அம்மன் குளக்கரையில் மது விற்ற சு. சண்முகத்தை (55) கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.