கந்தர்வகோட்டை பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவை தொகுதி சக்தி, மகாசக்தி கேந்திரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தொகுதி அமைப்பாளர் சாந்தார் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை ஒன்றியத் தலைவர் கே. கார்த்திகேயன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் புரட்சி கவிதாசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்டதுணைத் தலைவர் சித்ரா, பவுன்ராஜ், தங்கவேல், தவமனி, ஜெயராமன், கேபிகே.பாண்டித்துரை, பி.ராமலிங்கம் நக்கீரன், சுமதி, மலர்க்கொடி, சுந்தரி, துரைராஜ், ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும், கூட்டத்தில், கட்சிக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்கவும், பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.