ஆலங்குடி இஸ்லாமிய மயானத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி
ஆலங்குடியில் உள்ள இஸ்லாமிய மயானத்தில் சுற்றுச்சுவர், ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணியை எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆலங்குடியில் உள்ள இஸ்லாமிய மயானத்தில் சுற்றுச்சுவர், ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணியை எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆலங்குடி இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.50 லட்சம் நிதி வழங்கி மயானத்தில் சுற்றுச்சுவர், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை எம்எல்ஏ சிவ வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலர் தங்கமணி, நகர செயலர் பழனிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.