புதுக்கோட்டை

தாண்றீஸ்வரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: அமைச்சர் நேரில் ஆய்வு

DIN

அன்னவாசல் அருகேயுள்ள தாண்றீஸ்வரம்  சத்ருசம்கார மூர்த்தி கோவில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்,  ஆட்சியர் சு. கணேஷ் ஆகியோர் ஞாயிற்றுகிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாடிவாசலில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதியின் இரு புறங்களில் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணி, முக்கியப் பிரமுகர்கள் அமருமிடம், காளைகள் பரிசோதனை செய்யும் 
இடம் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடப்பதை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.வருவாய் கோட்டாட்சியர் ஆர். ஜெயபாரதி, காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. கோபாலசந்திரன், வட்டாட்சியர் சோனை கருப்பையா, அரசு அலுவலர்கள், விழா குழுவினர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT