அறந்தாங்கியில் பார் கவுன்சில் தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார்கவுன்சில் அலுவலகத்தில் புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார்கவுன்சில் அலுவலகத்தில் புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.
புதுக்கோட்டை ஓய்வு பெற்ற நீதிபதி சி.மறைமணி முடியரசன் தலைமையில் அறந்தாங்கி வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர்.ராஜசேகர், வழக்குரைஞர் ஆர்.வினோத்குமார், உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்பட்டனர். அறந்தாங்கி பார்கவுன்சிலில் பதிவு பெற்ற 61 வழக்குரைஞர்கள் தங்கள் வாக்கை செலுத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 25 உறுப்பினர்கள் பதவிக்கு மொத்தம் 192 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 172 வாக்குப்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற நீதிமன்ற வளாகத்தில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வாளர் கே. பாலமுருகன், உதவி ஆய்வாளர் எஸ். குணசேகரன் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.