மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 910 மாணவிகளுக்கு ரூ. 5 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 910 மாணவிகளுக்கு ரூ. 5 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் சே.ராமதிலகம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ச.லதாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொன்னமராவதி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள்,
நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 100 பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த 910 மாணவிகளுக்கு தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை ரூ. 5 லட்சம் உரிய மாணவிகளுக்கு கிடைக்கும்வகையில் அந்தந்த தலைமையாசிரியர்கள் மூலம் புதன்கிழமை வழங்கப்பட்டது.