கந்தர்வகோட்டை அருகேவீரமாகாளி அம்மன் கோயிலில் கிடா வெட்டு
கந்தர்வகோட்டை அருகே பிரசித்தி பெற்ற பெரம்பூர் வீரமாகாளி அம்மன் கோயிலில் கிடாவெட்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அருகே பிரசித்தி பெற்ற பெரம்பூர் வீரமாகாளி அம்மன் கோயிலில் கிடாவெட்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலைக்கு கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேர்த்திக் கடனுக்காக ஆதனக்கோட்டை,
கந்தர்வகோட்டை, பெருங்களூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்களால் கொண்டு வரப்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டன. ஏற்பாடுகளை பெரம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.