முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை அலுவலக ஊழியர்கள் திங்கள்கிழமை எடுத்துக் கொண்டனர்.

Updated On : 22 மே, 2018 at 2:44 AM
பகிர்:

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை அலுவலக ஊழியர்கள் திங்கள்கிழமை எடுத்துக் கொண்டனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அதையொட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) எஸ்.மதியழகன் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், மரகதம், நல்லமுத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், வள்ளியம்மை, அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் அரசு அலுவலர்கள் திங்கள்கிழமை கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.