புதுக்கோட்டை சிறைச் சாலையில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் உள்ளனர். சிறையில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களில் 2 முறை நடந்த சோதனையில் ஏதும் சிக்கவில்லை.
இந்நிலையில், முறைகேடு புகார்களுக்கு பிறகு சென்னை புழல் சிறையில் இருந்து புதுக்கோட்டை சிறைக்கு கண்காணிப்பாளராக ருக்குமணி பிரியதர்ஷினி மாற்றப்பட்டார்.
இந்நிலையில், மாவட்ட சிறைச்சாலையில் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கைதிகளிடம் போதைப்பொருள்கள், செல்லிடப்பேசிகள், ஆயுதங்கள் ஏதும் உள்ளனவா சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் சோதனையில் ஏதும் சிக்கவில்லை என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.