புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் நதிநீர் இணைப்புத் திட்டத்தை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

புதுக்கோட்டை மாவ ட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம், பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.  
கந்தர்வகோட்டை பேருந்துநிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ரஜினி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் நடராஜன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ராமையன், ஒன்றியச் செயலாளர் வீராச்சாமி, நிர்வாகிகள் ரத்தினவேல், நாராயணசாமி, தர்மராஜ், சித்திரைவேல், இளையராஜா உள்ளிட்டோர் பேசினர்.  
விவசாயிகள் வாங்கிய அனைத்து வகை வங்கிக் கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும். 4 வழிச்சாலை என்ற பெயரில் விவசாயிகளின் அனுமதியின்றி நிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பிரசாரம் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT