புதுக்கோட்டை

கோயில்களில் நவராத்திரி விழா

DIN

பொன்னமராவதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. 
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 46ஆம் ஆண்டு நவராத்திரி விழா கட்த புதன்கிழமை (அக்.10) தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 
புதன்கிழமை (அக்.17) மஹிசாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனை திரளான மக்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தி இன்னிசை நடைபெற்றது.  அதேபோல, பொன்னமராவதி ராமலிங்க சௌடாம்பிகை அம்மன், அழகிய நாச்சியம்மன், ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT