புதுக்கோட்டை

வட்டாட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்குப் பதிவு

DIN

பொன்னமராவதி அருகே ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற வட்டாட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்குப் பதியப்பட்டன.
பொன்னமராவதி அருகே காரையூர் மருதம்பட்டியில் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற கிராமமக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றனர். ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்யும் போது சிதம்பரம் என்பவர் பணி செய்யவிடாமல் தடுத்தாராம்.  இதுகுறித்து காரையூர் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT