அறந்தாங்கியில் மின்சார வாரிய ஓய்வூதியர் சங்கக் கூட்டம்
அறந்தாங்கியில் தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கியில் தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் எம்.ரெங்கசாமி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். சங்க நடவடிக்கை, ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீடு குறித்து மாநிலச் செயலாளர் ஜி.நாகராஜ் பேசினார்.
இணைச் செயலாளர் வி.பசுபதி, நிர்வாகிகள் பொன்னுசாமி, டி.சுப்பிரமணியன், சாமிக்கண்ணு, சாத்தையா, மெய்யர் உள்ளிட்டோர் பேசினர்.மின்சார வாரிய பணியாளர்களுக்கு 60 ஆண்டு சிறப்புப் பரிசாக 3 சதவீத ஊதிய உயர்வை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டும். சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பொருளாளர் கே.மோகனசுந்தரம் வரவேற்றார். முடிவில், கோபாலமூர்த்தி நன்றி கூறினார்.