அறந்தாங்கியில் மகளிர் கஞ்சிக்கலய ஊர்வலம்
அறந்தாங்கியில் உலக நலனை முன்னிட்டும், மழை வேண்டியும் ஞாயிற்றுக்கிழமை 5,004 மகளிர் கஞ்சிக் கலயம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
அறந்தாங்கியில் உலக நலனை முன்னிட்டும், மழை வேண்டியும் ஞாயிற்றுக்கிழமை 5,004 மகளிர் கஞ்சிக் கலயம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறந்தாங்கி கிளை சார்பில் 30 ஆவது ஆண்டாக அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இருந்து கஞ்சிக் கலயத்துடனும், வேப்பிலையும் வைத்து அறந்தாங்கி சக்திகள் தலைமையில் ஊர்வலமாக பாரதிதாசன் சாலை, புதுகை சாலை, வாகைமர சாலை , வீரமாகாளியம்மன் கோயில் சாலை, பெரியகடை வீதி வழியாக வந்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நிறைவு பெற்றது.
அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மகளிர் செவ்வாடை அணிந்து விரதமிருந்து கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.