புதுக்கோட்டை

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் பிரசார இயக்கம்

DIN


புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு பிரசார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 19-ல் வழங்கப்பட்டுள்ள எழுத்துரிமை, கருத்துரிமை, கூட்டம் நடத்துவது, சங்கம் அமைப்பது, வசிக்கும் உரிமை, தொழில் உரிமை உள்ளிட்டவற்றை மத்திய, மாநில அரசுகள் கேள்விக்குள்ளாக்கிவரும் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசராத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை நகர் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்துக்கு கட்சியின் நகரச் செயலர் சி. அடைக்கலசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. அன்புமணவாளன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். ஜியாவுதீன், எம். அசோசன், டி. சலோமி, நகரக் குழு உறுப்பினர்கள் அ. முத்தையா, ஆர். சேலையப்பன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT