புதுக்கோட்டை

அறந்தாங்கியில் கருணாநிதி கவிதை அரங்கம்

DIN

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட  திமுக சார்பில் கருணாநிதிக்கு கவிதை  அரங்கம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி நகர திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருமயம் எம்எல்ஏவுமான  எஸ். ரகுபதி தலைமை வகித்தார். ஆலங்குடி எம்எல்ஏ   சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை கவிதைப்பித்தன் தலைமையில் நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சியில் கவிஞர் வி.ம. இளங்கோவன், வல்லம் தாஜ்பால்,  பா. வெங்கடேசன், மரிய எட்வின் உள்ளிட்டோர் கவிதை படித்தனர்.
நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன். துரை, நகரச் செயலர் இரா. ஆனந்த், ஒன்றிய செயலர்கள் அறந்தாங்கி பொன். கணேசன், மணமேல்குடி சக்தி. இராமசாமி, திருவரங்குளம் கே.பி.கே. தங்கமணி, கைராசி புருசோத்தமன், ஆ. செல்லதுரை, க. ராஜேந்திரன், வின்சென்ட் ராஜேந்திரன், வி.சி. செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT