புதுக்கோட்டையில், இந்திய மாதர் சம்மேளனத்தின் சார்பில் வன்முறைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள இந்திய மாதர் சம்மேளனத்தின் சார்பில் வன்முறையற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு பல்வேறு குழுக்களாக நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலர் ஆனி ராஜா, மாநிலச் செயலர் பத்மாவதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கலைக்குழுவோடு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இக்குழுவினரை வரவேற்று, கோரிக்கையை விளக்கி சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் சுப்புலெட்சுமி, மாவட்டத் தலைவர் பூமதி, மாவட்ட நிர்வாகிகள் இந்திராணி, கோமதி, விமலா உள்ளிட்டோர் பேசினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.