புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்திக்குத் தயாராகும் வண்ண வண்ணச் சிலைகள் 

DIN

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுக்கோட்டை நகரில் ஒரு அடி முதல் 12 அடி வரையிலான வண்ண வண்ணச் சிலைகள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.
 விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப். 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கிராமங்கள், நகரங்கள் தோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ஒரு நாளில் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படும்.
 புதுக்கோட்டை மாவட்டத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டுக்கான விநாயகர் சிலை செய்யும் பணி தெற்கு ராஜவீதியில் உள்ள கடையொன்றில் நடைபெற்று வருகிறது. ஒரு அடி முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகளைச் செய்து வண்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து சிலைகள் தயாரிக்கும் மணி கூறியது ஒரு அடி சிலை ரூ. ஆயிரத்தில் தொடங்கி, 12 அடி சிலை ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்கிறோம். காகிதக் கழிவுகள் மற்றும் கிழங்கு மாவு கொண்டு தயாரிக்கப்படும் இச்சிலைகளில் வண்ணம் பூசி முழு வடிவம் கொடுக்கிறோம்.
 15 நாட்களுக்கு முன்பே சிலை செய்வதற்காக கரூர், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் இருந்தும் சிலை செய்பவர்கள் வந்துள்ளனர்.
 ஆஞ்சநேயர் தனது தோளில் விநாயகரை சுமக்கும் வடிவம், விநாயகர் சிவனைத் தூக்கிச் சுமக்கும் வடிவம் போன்றவை நிகழாண்டில் வந்துள்ள புதியவை என்றார் மணி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT