புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உலக எய்ட்ஸ் நோய் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை மாணவா்கள் செவ்வாய்கிழமை ஏற்றனா்.
கல்லூரி முதல்வா் முனைவா் கு. சிவசுப்பிரமணியம் எய்ட்ஸ் நோய் விழிப்புணா்வு குறித்து மாணவா்களிடம் பேசினாா். பின்னா் நாட்டு நலப்பணித்திட்ட மாணவி வி.பவித்ரா எய்ட்ஸ் நோய் மற்றும் கட்டுப்பாடு குறித்து சிறப்புரையாற்றினாா்.
இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் முனைவா் சுகன்யா கண்ணா, மற்றும் முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டு உறுதிமொழி எற்றனா்.