புதுக்கோட்டை

விஜயரகுநாதபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் விஜயரகுநாதபுரம் பாரதி நகரில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
கல்லூரி தாளாளர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர்கள் கே. ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி, எஸ். சவரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைக்குறிச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப. செல்வராஜ் முகாமைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சிக் குழுவின் முன்னாள் தலைவர் வி.சி. ராமையா தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.  
முகாமில், கல்லூரியின் துணை முதல்வர் மா. குமுதா, கவிஞர் மு. பாலசுப்பிரமணியன், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் நா. பூர்ணிமா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தெ. செளந்தர்யா வரவேற்றார். திட்ட அலுவலர் சி. அம்பிகா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT