புதுக்கோட்டை

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

DIN

புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்கள் புதுக்கோட்டை விஜயரகுநாதபுரத்திலும், பாரதி நகரிலும் நடைபெற்றன. ஏழு நாள் முகாம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இவற்றுக்கான நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் உடற்கல்வித் துறை   இணைப் பேராசிரியருமான ஏ.எஸ். நாகேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பாக பங்கேற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.நிகழ்ச்சியில்  கல்லூரியின் செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர்கள் கே. ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி, கைக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சுப. செல்வராஜ், கல்லூரித் துணை முதல்வர் மா. குமுதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT