அரசுப் பள்ளிகளுக்கு பொதுமக்கள் கல்விச்சீர்
பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் ரூ. 1.02 லட்சம்
பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் ரூ. 1.02 லட்சம் மதிப்பிலான கல்விச்சீர் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ராஜாசந்திரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் செந்தில்நாதன் வரவேற்றார்.
நெடுவாசல் அரசுப்பள்ளி க்கு... ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் வடக்கு அரசு தொடக்கப் பள்ளிக்கு பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் சார்பில் வெள்ளிக்கிழமை கல்விச்சீர் வழங்கப்பட்டன.