8,606 டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக 8,606 டன் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
புதுதில்லி: ஒதுக்கீடு அடிப்படையிலான வரிச் சலுகைத் திட்டத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக 8,606 டன் சர்க்கரையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டிஆர்கியூ (TRQ) - திட்டத்தின் கீழ், அக்டோபர் 01, 2025 முதல் செப்டம்பர் 30, 2026 வரையிலான காலத்தில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள 8,606 மெட்ரிக் டன் அனுமதிக்கும் சர்க்கரைக்கான அளவு என்று வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநரகம் (DGFT) தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
summary