புதுக்கோட்டை

அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

DIN

தமிழக அரசின் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற விரும்புவோர் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 
இதுகுறித்து விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் கா. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணிக்குச் செல்லும் பெண்களின் சிரமத்தைப் போக்கும் வகையில்,  மானியத்துடன் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்தை மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். முதல்கட்ட இருசக்கர வாகனம் வழங்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, நிகழாண்டுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை பெறப்படுகிறது. எனவே வேலைக்குச் செல்லும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT