புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் நீதிமன்றம் அமைக்க தற்காலிக இடம் தேர்வு

கந்தர்வகோட்டையில் நீதிமன்றம் அமைக்க தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

DIN

கந்தர்வகோட்டையில் நீதிமன்றம் அமைக்க தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றப் பணிக்காக கந்தர்வகோட்டையிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில்,  தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்ற அரசு கொள்கை முடிவின்படி கந்தர்வகோட்டையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க பல ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து கந்தர்வகோட்டை செட்டிதெருவில் உள்ள தனியார் கட்டத்தில்  நீதிமன்றத்தை தற்காலிகமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் அங்கு பார்வையிட்டார். வட்டாட்சியர் கோ. கலைமணி, விஏஓ  தெ. கருப்பையா, உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT