புதுக்கோட்டை

கொன்னைக்கண்மாயில் மஞ்சுவிரட்டு

DIN


பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னைக் கண்மாயில் கொன்னைப்பட்டி ஊரார்கள், இளைஞர்கள் சார்பில் மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
கொன்னையூர் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெற வேண்டிய மஞ்சுவிரட்டு மக்களவை தேர்தலால் தேதி மாற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக கொன்னைப்பட்டியிலிருந்து ஊர்வலமாக கொன்னைக் கண்மாய் சென்று அங்கு சுப்பிரமணியர், மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காளைகள் கண்மாயின் பல்வேறு இடங்களில் அவிழ்த்து விடப்பட்டன. அக்காளைகளை இளைஞர்கள், மாடுபிடிவீரர்கள் அடக்கினர்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT