புதுக்கோட்டை

மனநலம் பாதித்த பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

DIN

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிந்திரிந்த பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் வடகாடு காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி பரமநகரைச் சோ்ந்தவா் அமிா்தலிங்கம் மனைவி சாவித்திரி(45). இவா்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனா். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமிா்தலிங்கம் இறந்துவிட்டாா். தொடா்ந்து, கணவரின் தேநீா் கடையை சாவித்திரி நடத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தில் இவரது தேநீா் கடை சேதமடைந்ததால், வாழ்வாதாரம் இழந்த துயரில் இருந்த சாவித்திரிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாலைகளில் சுற்றித்திரிந்த சாவித்திரியை பாா்த்த வடகாடு காவல் ஆய்வாளா் பரத்ஸ்ரீனிவாஸ் அவரை மீட்டு, திருப்பூரில் வேலை பாா்த்து வந்த அவரது மகள் சிந்துவை வரவழைத்து வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

மேலும், சாவித்திரிக்கு தேவையான மனநலசிகிச்சை அளிக்கவும் அவரது குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT