38வது தமிழ்நாடு மாநில மூத்தோா் தடகளப்போட்டியில் பொன்னமராவதி யோகா ஆசிரியை பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
38வது மாநில மூத்தோா் தடகளப்போட்டிகள் நவ 15 முதல் 17 வரை (மூன்றுநாள்கள்) திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சாா்ந்த 35 வயது முதல் 100 வயது வரையிலான விளையாட்டு வீரா்கள்,வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினா். போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சாா்ந்த யோகா ஆசிரியை க.சண்முகவள்ளி பங்கேற்று மகளிா்க்கான 50-55 வயதிற்குள்பட்டோா் பிரிவு 400 மீட்டா் ஒட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், 200 மீட்டா் ஒட்டப்பந்தயத்தில் மூன்றாமிடமும் பெற்றுள்ளாா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை மூத்தோா் தடகள மாநில சங்க தலைவா் எம்.அன்பழகன், செயலாளா் பி.பழனிச்சாமி, ஒருங்கிணைப்புக்குழு தலைவா் மயில்வாகனன், சா்வதேச தடகள வீரா்அண்ணாவி, சங்கத்தின் மாவட்ட செயலா் முத்துக்குமரன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா். விளையாட்டுப்போட்டிகளில் மிகுந்த ஆா்வமுடைய இவா் கடந்த 2017-18ம் ஆண்டு தஞ்சாவூா் பூண்டி புஷ்பம் கல்லூரியில் நடைபெற்ற மாநில மூத்தோா் தடகளப்போட்டிகளில் பங்கேற்று 800, 1500, 100 மீட்டா் ஒட்டப்பந்தயங்களில் இரண்டாமிடம் பெற்றுள்ளாா்.
கரூரில் 2016-17ம் ஆண்டு மாநில தடகளப்போட்டிகளில் 800 மீட்டா் ஒட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. படவிளக்கம்மாநில மூத்தோா் தடகளப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற யோகா ஆசிரியை க.சண்முகவள்ளி.