கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கராத்தே தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். கராத்தே பயிற்சியாளா் நல்லையா மாணவிகளுக்கு பயிற்சி அளித்தாா். பள்ளி உடற்கல்வி ஆசிரியா் பிரதீபா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.