புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு

DIN

கந்தர்வகோட்டை அருகே நகை அடகுக்கடை உரிமையாளரின்  மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து, ரூ.1.5 லட்சம் ரொக்கம், 12 கிராம் தங்கத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை அருகிலுள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (46). வேலாடிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வரும்  இவர், புதன்கிழமை கந்தர்வகோட்டை வங்கியிருந்து ரூ.1.5 லட்சம் ரொக்கம், 12 கிராம் தங்கத்தை எடுத்து, தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு கடைக்கு வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்று சிறிது நேரம் கழித்து வந்த போது, மோட்டார் சைக்கிளில் பெட்டி திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பெட்டியிலிருந்த ரொக்கம், நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை சரிபார்த்த போது,  இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதும், ஒருவர் பெட்டியை உடைத்து திருடியதும், மற்றொருவர் காத்திருந்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து  விடியோ ஆதாரங்களுடன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT