புதுக்கோட்டை

பொன்னமராவதியில் தலைக்கவசம் அணிந்து வந்தோருக்குப் பாராட்டு

DIN


பொன்னமராவதியில் காவல் துறை சார்பில் தலைக்கவசம்  அணிந்து சென்ற இரு சக்கரவாகன ஒட்டிகளுக்கு பாராட்டும்,  தலைக்கவசம் அணியாதவர்களை எச்சரித்து சாலைப் பாதுகாப்பு துண்டுப்பிரசுரங்களும் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. தமிழ்மாறன் அறிவுறுத்தலின் பேரில் பேருந்து நிலையம், அண்ணாசாலை பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான காவலர்கள் தலைக்கவசம் அணிந்து வந்த  இருசக்கர வாகன ஒட்டிகளை கைகுலுக்கி பாராட்டினர். 
அதுபோல தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஒட்டிகள், சீட் பெல்ட் அணியாத கார் ஒட்டுநர்களை எச்சரித்து விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT