புதுக்கோட்டை

அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

DIN

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் நடைபெற்ற விரைவு மிதிவண்டிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மிதிவண்டிக் கழகம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் போட்டி நடைபெற்றது.
13, 15, 17 ஆகிய வயதுப் பிரிவுகளில் தனித்தனியே நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வென்ற முதல் மூன்று நபர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மாவட்ட மிதிவண்டிக் கழகச் செயலர் அசோகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT