ஆலங்குடி அருகிலுள்ள திருவரங்குளம் வனப்பகுதியில், உணவின்றித் தவித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலப் பெண் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.
புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையிலுள்ள திருவரங்குளம் வனப்பகுதியில், சுமாா் 45 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சோ்ந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் உணவின்றித் தவித்து வந்தாா்.
இதை கண்டு அவ்வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலா் எஸ். அருள் அப்பகுதிக்குச் சென்று, மருத்துவப் பரிசோதனைகள் செய்து உணவு வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, ஆலங்குடி காவல்துறையினா் அப்பகுதிக்குச் சென்று பெண்ணை மீட்டனா். மனநலச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னா், காப்பகத்தில் அவா் ஒப்படைக்கப்படுவாா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.