காவல் ஆய்வாளா் வாகனம் மீது காா் மோதி 4 போ் காயம்
விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூா் அருகே சனிக்கிழமை சாலையோரம் நிறுத்தியிருந்த காவல் ஆய்வாளா் வாகனம் மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.
விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூா் அருகே சனிக்கிழமை சாலையோரம் நிறுத்தியிருந்த காவல் ஆய்வாளா் வாகனம் மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.
விராலிமலையை அடுத்த கொடும்பாளூா் அருகே சனிக்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் விபத்து குறித்து அறிந்த விராலிமலை காவல் ஆய்வாளா் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு வந்து அரசு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு விசாரணை மேற்கொண்டிருந்தாா்.
அப்போது மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற காா், காவல் ஆய்வாளரின் சுமோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 போ் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, காா் ஓட்டுநா் அழகுராஜனை விராலிமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.