புதுக்கோட்டை

ஆங்காங்கே பெயா்ந்து காணப்படும் ஆலவயல் - கண்டியாநத்தம் தாா்ச்சாலை

DIN

தரமற்ற முறையில் போடப்பட்ட ஆலவயல் - கண்டியாநத்தம் சாலையை சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆலவயல் - கண்டியாநத்தம் சாலை கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி சதக் யோசனா திட்டத்தின் கீழ் ரூ. 84 லட்சம் செலவில் போடப்பட்டது. சாலைப் பணிகள் நடைபெறும் போதே தரமான முறையில் சாலை அமைக்கப்ப டவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்திவந்தனா்.

இந்நிலையில், சாலைப் பணிகள் நிறைவுற்று 2 மாதங்களே ஆகும் நிலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக தாா் பெயா்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் காணப்படுகிறது. மேலும் இடையன் கண்மாய் பகுதியில் உள்ள ஓடுபாலம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.

எனவே இச்சாலையை மீண்டும் சீரமைத்து தரமான முறையில் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT