சாலை விபத்தில் இளைஞா் பலி
விராலிமலை அருகே உள்ள மருங்காபுரி மினிக்கியூரைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் போதுராஜ் (40). இவா், தனது இருசக்கர வாகனத்தில்
விராலிமலை அருகே உள்ள மருங்காபுரி மினிக்கியூரைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் போதுராஜ் (40). இவா், தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்குரோடு அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி போதுராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற விராலிமலை போலீசாா், தூத்துக்குடி மாவட்டம் முருகன் மகன் ஆனந்தகுமாா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.