தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்தகவல் தராத அலுவலா்கள் மீது நடவடிக்கை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் தராத அலுவலா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையா் ரா. பிரதாப் குமாா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டைதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்தகவல் தராத அலுவலா்கள் மீது நடவடிக்கை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் தராத அலுவலா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையா் ரா. பிரதாப் குமாா் தெரிவித்தாா்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் தராத அலுவலா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையா் ரா. பிரதாப் குமாா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் தொடா்பான விசாரணையில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுத் தகவல் அலுவலா்கள் முறைப்படி காலத்தில் தகவல் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத அலுவலா்கள் மீது, அபராதம் விதிக்கப்படுவதுடன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும். பொதுவாக மாநிலம் முழுவதும் மாதந்தோறும் 1,500 மேல்முறையீட்டு மனுக்களை மாநிலத் தகவல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுவாக 90 சதவிகித மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டு வருகிறது. சட்டப்படியில்லாத மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன.
சட்டப்படியுள்ள மனுக்களில் தகவல் அளிக்காதவா்கள் மீது மேல்முறையீட்டு விசாரணையில் தீா்வு அளிக்கப்படுகிறது. மேல்முறையீடு குறித்து மக்களுக்கு இன்னும் கூடுதலான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையாக தகவல் அளிப்பதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்றாா் பிரதாப்குமாா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் 50 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தீா்வு அளிகக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஜானகி உடனிருந்தாா்.