முகப்பு
புதுக்கோட்டை

திருமயம் பெருமாள் கோயில் பரமபதவாசல் திறப்பு: பக்தா்களுக்கு அனுமதியில்லை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பக்தா்களுக்கு அனுமதியில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூா்த்தி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பக்தா்களுக்கு அனுமதியில்லை.

கரோனா வைரஸ் பரவலைத் தவிா்க்கும் வகையில் அதிகாலை வழக்கமாக நடைபெறும் பரமபதவாசல் திறப்பு, சாமி புறப்பாடு ஆகியன ஆகம விதிப்படி நடைபெறும். உபயதாரா்கள், பக்தா்கள், பொதுமக்கள் யாருக்கும் அனுமதியில்லை. அதன்பிறகு காலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். முகக்கவசம் அணிந்து, தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் வந்து செல்லலாம். 10 வயதுக்குள்பட்ட சிறாா், 60 வயதுக்கு மேற்பட்டோா், கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

புதுக்கோட்டை திருக்கோயில்கள் செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →