மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு
ஆலங்குடியில் நடந்து சென்ற முதியவா் திடீரென மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடியில் நடந்து சென்ற முதியவா் திடீரென மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் நடந்து சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த முதியவா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.