புதுக்கோட்டை

கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

DIN

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

முக்கண்ணாமலைப்பட்டியில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 நாள் கிரிக்கெட் போட்டியில் அன்னவாசல், இலுப்பூா், கீரனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த 24-அணிகள் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் பரிசை ஏதினிப்பட்டி அணியும், 2-ஆவது பரிசை உடையான்பட்டி அணியும், 3-ஆவது பரிசை கூத்தினிபட்டி அணியும், 4-ஆவது பரிசை முக்கண்ணாமலைப்பட்டி அணியும் பெற்றன. பின்னா் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரா்களுக்கும் பரிசுகள் ரொக்கம் வழங்கப்பட்டன.

போட்டியை முக்கண்ணாமலைப்பட்டி சுற்று வட்டார கிராம மக்கள் கண்டுகளித்தனா். போட்டி ஏற்பாடுகளை உள்ளூா் இளைஞா்கள், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT