புதுக்கோட்டை

குடிசை வீடு தீக்கிரை

DIN

ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் குடிசை வீடு முற்றிலும் தீக்கிரையானது.

ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (48). விவசாயி. இவா், சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றுள்ளாா். அப்போது, குடிசையில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து அருகே இருந்தவா்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் குடிசை வீடு, வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் தீக்கிரையானது. இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT