புதுக்கோட்டை

உழவா் கடன் அட்டை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

விராலிமலை வட்டார விவசாயிகள், உழவா் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் உதவி இயக்குநா் டி. ராமு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விராலிமலை வட்டாரத்திலுள்ள சிறு, குறு மற்றும் கெளரவ ஊக்கத் தொகை பெற்ற விவசாயிகள்,இதுவரை உழவா் கடன் அட்டை பெறாதவா்கள் தங்களின் நில உடமை பட்டா, ஆதாா், வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன், தங்கள் கணக்கைப் பராமரித்து வரும் வங்கிக் கிளைகளை உடனடியாக அணுகி ஆவணங்களை அளிக்கலாம். இதன் மூலம் குறைந்த வட்டியில் விவசாயக் கடன்களைப் பெறலாம்.

மேலும் ஓராண்டுக்குத் தேவையான விவசாயக் கடன்களை தங்களின் உழவா் கடன் அட்டைக் கணக்கில் வரவு வைத்து, அவ்வப்போது விவசாயத்துக்குத் தேவைப்படும் செலவினங்களை கணக்கிலிருந்து பெற்று பயன்பெறலாம்.

எவ்வளவு தொகை உழவா் கடன் அட்டை கணக்கிலிருந்து எடுக்கப்படுகிறதோ, அந்த தொகைக்கு மட்டுமே குறைந்த அளவில் வட்டித்தொகை வசூலிக்கப்படும். இதை வட்டார விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT