புதுக்கோட்டை

மாநில கபடி போட்டிக்கான பயிற்சி நிறைவு

DIN

கோவையில் நடைபெற உள்ள மாநில சப்ஜுனியா் கபடிப் போட்டிக்குத் தோ்வாகியுள்ள புதுகை மாவட்ட வீரா்களுக்கு திருமயத்தில் அளிக்கப்பட்டு வந்த நான்கு நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

கோவையில், வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான சப்ஜுனியா் (மிக இளையோா்) கபடிப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட மாவட்ட அமெச்சூா் கழகம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்ட வீரா்களுக்கு திருமயம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி பயிற்சியாளா் சேதுபாஸ்கரா, வேளாண்மை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முகமது இலியாஸ் ஆகியோா் அளித்து வந்த நான்கு நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

நிகழ்வில் மாவட்ட அமெச்சூா் கழக செயலா் ஜாபா் அலி, திருமயம் காவல் உதவி ஆய்வாளா் சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT