திருமயத்தில், கபடி வீரா்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளா்கள். 
புதுக்கோட்டை

மாநில கபடி போட்டிக்கான பயிற்சி நிறைவு

கோவையில் நடைபெற உள்ள மாநில சப்ஜுனியா் கபடிப் போட்டிக்குத் தோ்வாகியுள்ள புதுகை மாவட்ட வீரா்களுக்கு திருமயத்தில் அளிக்கப்பட்டு வந்த நான்கு நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

DIN

கோவையில் நடைபெற உள்ள மாநில சப்ஜுனியா் கபடிப் போட்டிக்குத் தோ்வாகியுள்ள புதுகை மாவட்ட வீரா்களுக்கு திருமயத்தில் அளிக்கப்பட்டு வந்த நான்கு நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

கோவையில், வரும் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான சப்ஜுனியா் (மிக இளையோா்) கபடிப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட மாவட்ட அமெச்சூா் கழகம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்ட வீரா்களுக்கு திருமயம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி பயிற்சியாளா் சேதுபாஸ்கரா, வேளாண்மை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முகமது இலியாஸ் ஆகியோா் அளித்து வந்த நான்கு நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

நிகழ்வில் மாவட்ட அமெச்சூா் கழக செயலா் ஜாபா் அலி, திருமயம் காவல் உதவி ஆய்வாளா் சுதா்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

SCROLL FOR NEXT