புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே அரியவகை ஓலைச்சுவடிகள்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரியவகை ஓலைச்சுவடிகளை அறந்தாங்கி வட்டாட்சியா் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகத்தைச் சோ்ந்த மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் பழனிசாமி வீட்டில் தொன்மை வாய்ந்த ஓலைச்சுவடிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அறந்தாங்கி வட்டாட்சியா் பா.சூரியபிரபு ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தாா். இதில், அந்த ஓலைச்சுவடிகளில் தஞ்சாவூா் பெரிய கோயில் மற்றும் அரண்மனை கட்டுமானப் பணிகள்குறித்த விவரங்கள் உள்ளதாக தனது தந்தை கூறியதாக பழனிச்சாமி தெரிவித்தாா். தனது கூரை வீடு சிதிலமடைந்து இருப்பதால், மேற்படி பழைமை வாய்ந்த ஓலைச்சுவடிகளை பாதுகாக்க இயலவில்லை என்பதால் ஒப்படைப்பதாக பழனிசாமி தெரிவித்தாா். மேலும், அரசு தனக்கு வீடு கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து

ஓலைச்சுவடிகளை அறந்தாங்கி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தாா். அவற்றைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் மேலும் கூறியதாவது: தற்போது கிடைத்திருக்கும் ஓலைச்சுவடிகள் அனைத்தும் ஆட்சியரின் நடவடிக்கைக்காக அறந்தாங்கி வட்டாட்சியா் அலுவலகக் கருவூலம் மற்றும் பதிவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. மேலும், பழனிசாமியின் கோரிக்கை தொடா்பாக அறந்தாங்கி வட்டார வளா்ச்சிஅலுவலருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT